கருங்காலி தாயத்து
நமது இந்திய திருநாட்டில் உள்ள மரங்களில் பல அதி அற்புதமான சக்தி நிறைந்ததாகும். அவற்றில் மிக முக்கியமரம் கருங்காலி மரம் என்று துணிந்து கூறலாம். காரணம் எங்கே கருங்காலி மரம் வளர்கிறதோ அங்கே இடி விழாது மின்னல் தாக்காது அவ்வளவு விரைவில் இயற்க்கை சீற்றங்கள் அண்டாது. அதனால் தான் பண்டையகால கோவில் கோபுர கலசங்களில் நவதானியதோடு கருங்காலிகட்டையையும் கலந்து வைத்து கும்பாபிஷேகம் நடத்துவார்கள்.
அந்த கால சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் கையில் தவம் செய்வதற்காக ஒரு கட்டையை வைத்திருப்பதை பழைய சிற்பங்களும் ஓவியங்களும் நமக்கு காட்டுகிறது. அந்த கட்டை கருங்காலி மரத்தால் செய்யப்பட்டதாகும். அதை சித்தர்கள் பயன்படுத்தியதற்கு மிக முக்கிய காரணம் பிரபஞ்ச வெளியில் நிறைந்திருக்கும் மின்காந்த அலைகளை ஒட்டுமொத்தமாக கிரகித்து அதை வைத்திருப்பவர்களின் உடம்பிற்குள் அனுப்பும் இதனால் மந்திர சித்தியும் தியான சித்தியும் வாக்கு சித்தியும் ஏற்படும்
குற்றால குறவஞ்சி என்ற சிற்றிலக்கிய நூலில் திரிகூட ராசப்ப கவிராயர் மலைக்குறத்தி கையில் கருங்காலி கட்டையை வைத்து கொண்டு குறி சொல்வதாக பல பாடல்களில் கூறுகிறார். அதனுடைய உண்மையான பொருள் கருங்காலி கட்டை சகலவிதமான தெய்வீக சக்திகளையும் தனக்குள் ஈர்க்க வல்லது.
தீய மந்திர பிரயோகங்களை ஒருநொடியில் பயனற்று போக செய்ய வல்லது. அத்தோடு மட்டுமல்ல நமது குலதெய்வத்தின் அருளையும் நமக்கு தங்கு தடையில்லாமல் ஈட்டித்தர வரல்லது
தோதகத்தி என்று மறுபெயர் கொண்ட கருங்காலி கட்டை எங்கு இருக்கிறதோ அங்கு கண்திருஷ்டி அனைத்து தோஷமும் வராது.
ஸ்ரீ குருஜி ஆஸ்ரமத்தில் தயார் கருங்காலி தாயத்தை அணியும் போது
அளவற்ற செல்வத்தையும் வளமான வாழ்க்கையையும் மன நிம்மதியையும் பெறலாம். நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆரோக்கியத்தோடு சுகமாக வாழலாம். கண்திருஷ்டி விலகும்.
இத்தகைய பல சிறப்புகளை பெற்ற கருங்காலி தாயத்தை நமது குருஜி ஆசிரமத்தில் முறைப்படி பூஜை செய்யப்பட்டு மந்திர உரு ஏற்றப்பட்டு உங்களுக்காக மிக குறைந்த விலையில் தருகிறோம்.
No Customer Reviews
Share your thoughts with other customers